இந்தியக் கடற்படையானது வளைகுடா பிராந்தியத்தில் “சங்கல்ப் நடவடிக்கை” என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஒரு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கொடியிடப்பட்ட கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்த நடவடிக்கையானது பின்வரும் மத்திய அமைச்சகங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்,
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்,
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம்,
மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம்.