மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சங்கல்ப் நடவடிக்கை என்பது இந்தியக் கடற்படையால் ஜூன் 19, 2019 அன்று தொடங்கப் பட்ட ஒரு கடல்சார் பாதுகாப்புப் பணியாகும்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) இந்தியக் கொடியுடன் கூடிய வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இது தொடங்கப்பட்டது.
இந்த நடவடிக்கை ஹார்மஸ் ஜலசந்தி, ஓமன் வளைகுடா மற்றும் ஏதேன் வளைகுடாவில் கடல் வழிகளைப் பாதுகாக்கிறது.
இது இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தைப் பாதுகாப்பதையும், அப்பகுதியில் கடற் கொள்ளையைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பணிக்கு கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்புச் சட்டம், 2022 உடன் துணை புரிகிறது.