ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற ஒரு விழாவில் 2017ம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
இசை, நடனம், நாடகம், பாரம்பரியம், நாட்டுப்புறக் கலை, பழங்குடி இசை உள்ளிட்ட துறைகளிலிருந்து 42 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இசைத் துறையில் 11 புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான சங்கீத நாடக அகாடமி விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அமைப்பு 1952ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.