மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்தியக் கடலோரக் காவற் படைக் கப்பலான சசேத் என்ற கப்பலையும் சி-451 மற்றும் சி-450 என்ற 2 இடைமறிப்புப் படகுகளையும் கோவாவில் பாதுகாப்புப் படையின் பணியில் இணைத்துள்ளார்.
சசேத் கப்பல் ஆனது 5 கடலோரக் காவல் கண்காணிப்புக் கப்பல் தொகுதிகளின் முதலாவது கப்பலாகும்.
இது கோவா கப்பல் கட்டும் தளத்தினால் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப் பட்டுள்ளது.