TNPSC Thervupettagam

சட்டக் கல்லூரிகளில் திருநர்களுக்கான இடஒதுக்கீடு – கேரளா

November 10 , 2025 11 days 55 0
  • அனைத்து மாநிலச் சட்டக் கல்லூரிகளிலும் திருநர் சமூக மாணாக்கர்களுக்கு இரண்டு கூடுதல் /சூப்பர்நியூமரரி இடங்களை ஒதுக்கும் கேரள அரசின் முன்மொழிவை இந்திய வழக்குரைஞர் கழகம் (BCI) அங்கீகரித்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட கேரள உயர்நீதி மன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
  • கேரள அரசானது, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் தேதியன்று மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டு LLB படிப்புகளுக்கு இந்த நடவடிக்கையை அறிமுகப்படுத்த முன் மொழிந்தது.
  • 2025 ஆம் ஆண்டு கேரள சட்ட நுழைவுத் தேர்வில் (KLEE) தகுதி பெற்ற ஒரு திருநர் தேர்வாளர் இந்த வழக்கினைத் தொடுத்தார், ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது.
  • இந்த ஒப்புதல் உச்ச நீதிமன்றத்தின் NALSA தீர்ப்பு (2014) மற்றும் திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்