தமிழ்நாடு-நிலையான கடற்கரை மற்றும் பெருங்கடல் வள திறன் (TN–SHORE) எனப் படும் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு திட்டமானது 1,675 கோடி ரூபாய் மதிப்பில் ஆனதாகும்.
உலக வங்கியானது இதற்கு 1,000 கோடி ரூபாய் பங்களிக்கும் என்ற நிலையில் மீதம் உள்ள நிதியை தமிழ்நாடு அரசு வழங்கும்.
TN–SHORE திட்டத்தின் கீழ், 1,000 ஹெக்டேர் பரப்பிலான சதுப்புநிலங்கள் மீட்டெடுக்கப் படும் என்பதோடு இதில் 300 ஹெக்டேர் பரப்பிலான புதிய தோட்டங்கள் மற்றும் 700 ஹெக்டேர் தரமிழந்த பகுதிகள் அடங்கும்.
சதுப்புநில மறுசீரமைப்பிற்காக 38 கோடி ரூபாய் ஆரம்ப தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நிதி முடிவெடுக்கும் செயல்முறையினைச் செயல்படுத்துவதற்காக உலக வங்கி நிதியானது நேரடியாக கிராம சதுப்புநிலச் சபைகளுக்கு அனுப்பப்படும்.