சதுப்புநிலக் காடுகளின் சூழலமைப்பின் முக்கியத்துவம் பற்றிய புத்தகம்
July 20 , 2023 882 days 470 0
M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையானது (MSSRF), சதுப்பு நிலக்காடுகளின் சூழலமைப்பின் முக்கியத்துவம் குறித்த ஒரு புத்தகத்தினைச் சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.
பல்லுயிர் மற்றும் சதுப்பு நிலக்காடுகளின் சூழலமைப்பின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலான ஒரு சித்திர விளக்கப்படப் புத்தகமாகும்.
இது இந்தியா முழுவதும் உள்ள சதுப்புநிலம் சார்ந்த மர இனங்கள், சதுப்புநிலக் காடுகளின் மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் அந்த சூழலமைப்பில் வளரும் பல வன உயிரினங்கள் பற்றிய விளக்கங்களைக் கொண்டுள்ளது.