பல ஆண்டுகளாக, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் ஆனது புறக்கணிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு இனங்களின், மிக குறிப்பாக ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோராவின் ஊடுருவல் மற்றும் பரவலால் பாதிக்கப்பட்டது.
தற்போது, தமிழ்நாடு மாநில வனத்துறையானது இந்தக் கால்வாயின் ஒரு பகுதியை மீட்டெடுப்பதற்கான ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளது.
இது அதன் விளிம்போரப் பகுதிகளில் உள்நாட்டுச் சதுப்புநில இனங்களின் பசுமைப் மண்டலத்தினை நிறுவ உள்ளது.
சென்னையில் கழிப்பட்டூரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் அருகே புதிய சதுப்பு நிலக் காடு உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு மாநில வனத் துறையானது பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு பல்வேறு இனங்களிலிருந்து 12,500 சதுப்புநில செடிகளின் நாற்றுகளை நட்டது.
இதில் உவர்தன்மைக்கான சகிப்புத் தன்மை கொண்ட 6 இனங்களான - ரைசோபோரா முக்ரோனேட்டா, ப்ருகுயேரா சிலிண்ட்ரிகா, அவிசென்னியா மெரினா, ஏஜிசெராஸ் கார்னிகுலட்டம், எக்ஸ்கோகேரியா அகல்லோச்சா, அகந்தஸ் இல்லிசிஃபோலியஸ் - ஆகியவை அதில் அடங்கும்.