மாநில வனத்துறையானது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டு கடலோரக் கிராமங்களில் சதுப்புநிலத் தோட்டங்களை நிறுவச் செய்யும் ஒரு நடவடிக்கையினை மேற்கொண்டு ள்ளது.
இயற்கைப் பேரிடர்களிலிருந்து கிராமங்களைப் பாதுகாக்க உயிரிக் கட்டமைப்பு சார் கவசங்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் முத்துக்குடாவில் உள்ளூர்ச் சமூகத்தின் ஆதரவுடன் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.
மணமேல்குடி தொகுதியில் உள்ள மும்பாலை கடலோரக் கிராமத்தில் 20 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்புநிலத் தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, உயிரிக் கட்டமைப்பு சார் கவசங்களை உருவாக்கச் செய்வதன் மூலம் கடலோரப் புனரமைப்பு / மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.