2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று இந்தியாவின் மிகவும் வலிமையான செயற்கைக் கோள் செலுத்து வாகனமான ஜிஎஸ்எல்வி மாக் III – எம் 1 சந்திரயான் 2 விண்வெளிக் கலனை, அதன் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாகச் செலுத்தியது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம் SHAR-ன் 2 வது ஏவு தளத்திலிருந்து இந்தச் செயற்கைக் கோள் செலுத்தப்பட்டது.
சந்திரயான் – 2 திட்டம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.
முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுற்று வாகனம் (ஆர்பிட்டர்)
லேண்டர் (விக்ரம் என்று பெயரிடப்பட்ட தரையிறங்கும் சாதனம்)
ரோவர் (பிரக்யான் என்று பெயரிடப்பட்ட நிலவில் ஆய்வு செய்யும் சாதனம்)
இந்த லேண்டர் சாதனம் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 அன்று நிலவில் உள்ள மன்சீனஸ் C மற்றும் சிம்பெலியஸ் N என்ற இரண்டு பள்ளங்களுக்கிடையே ஒரு உயரிய சமவெளிப் பகுதியில் மென்மையான தரையிறக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
லேண்டரின் ஆயுட் காலம் (ஆய்வுக் காலம்) 1 நிலவு நாள் ஆகும்.
ஆய்வு செய்யும் சாதனம் 14 புவி நாட்களுக்குச் சமமான 1 நிலவு தினத்திற்கு நிலவின் மேற்பரப்பின்போது மீது ஆராய்ச்சியினை வெளியிட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும்.
ஆர்பிட்டர் ஆனது ஓராண்டு காலத்திற்குத் தனது ஆய்வுப் பணியைத் தொடரும்.