சந்தை தலையீட்டுத் திட்டம் - உருளைக்கிழங்கு கொள்முதல்
April 22 , 2026 7 days 51 0
2025-26 ஆம் ஆண்டிற்கான சந்தை தலையீட்டுத் திட்டத்தின் (MIS) கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உருளைக்கிழங்கு கொள்முதல் செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
உருளைக்கிழங்கிற்கான கொள்முதல் விலை கிலோவுக்கு ₹6.5 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இம்மாநிலத்தில் சுமார் 20 லட்சம் மெட்ரிக் டன் உருளைக்கிழங்கு கொள்முதல் செய்யப்படவுள்ளது.
இந்திய அரசு இதற்கு சுமார் ₹203.15 கோடி நிதியுதவி வழங்கும்.
அதிகப்படியான விநியோகம் அல்லது பிற காரணிகளால் சந்தை விலைகள் வீழ்ச்சி அடையும் போது விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் கொண்டைக்கடலை மற்றும் கர்நாடகாவில் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதும் இதில் அடங்கும்.