TNPSC Thervupettagam
August 1 , 2025 14 hrs 0 min 22 0
  • பதினேழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் சிறந்தச் செயல்திறனுக்காக புது டெல்லியில் 2025 ஆம் ஆண்டு சன்சத் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • இந்த விருதுகளில், தொடர்ச்சியாக மூன்று முறை பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அவர்களின் நிலையான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்ட நான்கு சிறப்பு தேர்வு மன்ற/ஜூரி விருதுகளும் அடங்கும்.
  • 2025 ஆம் ஆண்டு விருது பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த C.N. அண்ணாதுரை (திமுக) அவர்களும் ஒருவர் ஆவார்.
  • இந்த விருதுகள் அரசு சாரா அமைப்பால் வழங்கப்பட்டுள்ளன.
  • டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனையின் பேரில், இந்த விருதுகள் 2010 ஆம் ஆண்டு பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மற்றும் பிரசென்ஸ் இணைய இதழ் ஆகியவற்றால் நிறுவப்பட்டன.
  • மேலும், டாக்டர் கலாம் அவர்கள் 2010 ஆம் ஆண்டு மே மாதத்தில் சென்னையில் அதற்கான முதல் விருது வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்தார்.
  • குறிப்பாக, இந்த விருதைப் பெற்ற முதல் நபர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்