March 10 , 2026
13 hrs 0 min
120
- தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி அருகே இரண்டு சமண தீர்த்தங்கரர் கல் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இந்தச் சிற்பங்கள் நெய்குப்பை மற்றும் புதூர் உத்தமனூர் ஆகிய கிராமங்களில் கண்டறிய ப்பட்டன.
- இந்தச் சிலைகள் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது.
- தீர்த்தங்கரர்கள் தியான நிலையில் (அர்த்த-பர்யங்காசனம்), நீண்ட காது மடல்கள் மற்றும் தலைக்கு மேலே முக்குடைகளுடன் காணப்படுகின்றனர்.
- இந்தச் சிற்பங்கள் சுமார் 80 செ.மீ (நெய்குப்பை) மற்றும் 112 செ.மீ (புதூர் உத்தமனூர்) உயரம் கொண்டவை.
Post Views:
120