நீரில் மூழ்கக் கூடிய வாகனத்தில் மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்ப வேண்டும் என்ற இந்தியாவின் கனவானது 2021-22ல் 'சமுத்திரயான்' திட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வர இருக்கின்றது.
ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ள கடலில் சுமார் 6000 மீட்டர் ஆழத்தில் மூன்று நபர்களுடன் ஒரு நீரில் மூழ்கக் கூடிய வாகனத்தை அனுப்புவதற்கு இத்திட்டம் முன்மொழிகின்றது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த வாகனம் 72 மணி நேரம் கடற் படுக்கையில் ஊர்ந்து செல்லும் திறன் கொண்டது.
'சமுத்திரயான்' திட்டமானது புவி அறிவியல் அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும். இது சென்னையில் உள்ள தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனத்தால் (NIOT - National Institute of Ocean Technology) மேற்கொள்ளப் படுகின்றது.