சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருதுகள் 2020 - 16வது பதிப்பு
January 5 , 2021
1616 days
701
- இது 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறுமோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ வழங்கப் படுகிறது.
- இது ஹார்மனி அறக்கட்டளையின் ஒரு முன்னெடுப்பாகும்.
- ஹார்மனி அறக்கட்டளையானது சமூக நீதித்துறையில் செயல்படும் ஒரு சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.
- இதை டாக்டர் ஆபிரகாம் மத்தாய் அவர்கள் 2005 ஆம் ஆண்டில் மும்பையில் உருவாக்கினார்.
- இதுவே Missionaries of Charity (கருணைச் சபைகள்) எனும் அமைப்பின் உயர் தலைவர் சகோதரி பிரேமா அவர்களால் ஒப்புதல் அளிக்கப் பட்ட ஒரே விருதாகும்.
- Missionaries of Charity என்பது 1950 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் அன்னை தெரசா அவர்களால் துவங்கப் பட்ட ஒரு அமைப்பாகும்.
- இந்த ஆண்டில் இந்த விருதுகளுக்கான கருத்துரு 'Celebrating Compassion in Times of Covid' / கோவிட் காலத்தில் இரக்கக் குணத்தைக் கொண்டாடுதல் என்பதாகும்.
- இந்த ஆண்டு இந்த விருதினைப் பெற்றவர்கள் பின்வருமாறு
- டாக்டர் அந்தோணி ஃபாசி (அமெரிக்கா)
- தந்தை ஃபேபியோ ஸ்டீவனாஸி (மிலன், இத்தாலி)
- கிறிஸ்டியன் ஃப்ராகாஸி மற்றும் அலெஸாண்ட்ரோ ரோமாயோலி (இத்தாலி)
- டாக்டர் பிரதீப் குமார் (சென்னை)
- ஐ.பி.எஸ் சஞ்சய் பாண்டே ( மகாராஷ்டிரா)
- விகாஸ் கண்ணா (மன்ஹாட்டன், அமெரிக்கா) மற்றும்.
- கே.கே.ஷைலஜா (சுகாதார அமைச்சர், கேரளா).
Post Views:
701