மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகமானது சமூக வன வள உரிமைகள் குறித்த ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின் படி, சமூக வன உரிமைகளைச் செயல்படுத்த விரிவான வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.
வன உரிமைகள் சட்டம் என்று அழைக்கப்படும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரியமாக காடுகளில் வசிப்பவர்கள் சட்டம், 2016 ஆனது சமூக வன வள உரிமைகளை வரையறுக்கின்றது.
மேலும் இது ஒரு கிராமம் தான் பாரம்பரியமாக வைத்திருக்கும் வனங்களை அந்த கிராமமே பெறும் என்றும் கூறுகின்றது.
இது வனங்களைப் பாதுகாத்தல், அவற்றை மீண்டும் உருவாக்கல் போன்றவைகளை மேற்கொள்ள கிராம சபைகளிடம் அதிகாரங்களை வழங்குகின்றது.
இந்திய அரசியலமைப்பின் 73வது அரசியலமைப்புத் திருத்தமானது சமூக வனங்களை நிர்வகிக்க கிராம சபைகளிடம் அதிகாரங்களை வழங்குகின்றது.
இருப்பினும் சமூக வன உரிமைகளைச் செயல்படுத்த இதுவரை எந்தவொரு வழிகாட்டுதலும் இல்லை.
உள்ளூர் நிலைமை மற்றும் அவர்களின் (வனங்களில் வசிப்பவர்கள்) பாரம்பரியத்தைப் பொறுத்து மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.