உத்தரக்காண்ட் மாநிலம் சாமோலியில் சமீபத்தில் ஒரு பெரிய மேக வெடிப்பு நிகழ்வு ஏற்பட்டது.
கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.
பித்தோராகரில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளன என்பதோடு மேலும் ஹர்சில் பகுதியில் உருவாக்கப் பட்ட புதிய ஏரியும் நிரம்பி வருகிறது.
பர்கோட் தாலுக்காவில் உள்ள சியான்சட்டியில் யமுனை நதியின் ஓட்டம் தடுக்கப் பட்டுள்ளதால் அருகிலுள்ள வீடுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.