குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், விளக்கக் கேட்பு கடிதத்தினை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்.
ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் அல்லது பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மாநில மசோதாக்கள் குறித்து, அவர்கள் மேற் கொள்ளும் நடைமுறையை பரிந்துரைப்பதற்கும் 142வது சரத்தின் கீழ் நீதிமன்றம் அதன் உள்ளார்ந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்தை இது கோருகிறது.
143வது சரத்தின் கீழ் பரிசீலித்து ஒரு கருத்தை வழங்குவதற்காக வேண்டி உச்ச நீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் கொண்ட ஒரு தொகுப்பினைக் குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ளார்.
201வது சரத்தின் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் மிக நியாயமானதா இல்லையா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் முரண்பாடான தீர்ப்புகள் தற்போது இருப்பதாக குடியரசுத் தலைவரின் குறிப்பு கூறியது.
அரசியலமைப்பின் 142வது சரத்தின் "வரையறைகள் மற்றும் நோக்கம்" குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்தையும் இந்த குறிப்பு கோரியுள்ளது.
"இயல்பிலேயே அரசியலமைப்பின் விளக்கம் சம்பந்தப்பட்ட கூட்டாட்சி குறித்தப் பிரச்சினைகள்" குறித்த விவகாரங்களை விசாரிக்கக் கோரி, 131வது சட்டப் பிரிவின் கீழ் அல்லாமல், 32வது சரத்தின் கீழ் உச்ச நீதிமன்றத்தினை அணுகுவதற்கு மாநில அரசுகள் முயன்று வருகின்றன என்பதையும் அது எடுத்துக் காட்டியது.