சரத்து 142ன் கீழான உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள்
April 16 , 2026 133 days 248 0
இந்திய அரசியலமைப்பின் 142-வது சரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒரு திருமணத்தை ரத்து செய்துள்ளது.
முழுமையான நீதியை வழங்குவதற்கான எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க சரத்து 142 நீதிமன்றத்தை அனுமதிக்கிறது.
பணத்தைப் பெற்றுக்கொண்டு பரஸ்பர விவாகரத்து ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கியது மற்றும் குடும்ப வன்முறை வழக்கைப் பதிவு செய்தது தொடர்பான வழக்கு இதுவாகும்.
மத்தியஸ்தத்தின் மூலம் செய்யப்படும் ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தக் கூடியவை என்றும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், அவை முறை அற்றவை என்றும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
அனைத்து வழக்குகளையும் ரத்து செய்த நீதிமன்றம், மீதமுள்ள தீர்வுத் தொகையைச் செலுத்துமாறு உத்தரவிட்டது.