TNPSC Thervupettagam

சரத்து 142ன் கீழான உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள்

April 16 , 2026 2 days 65 0
  • இந்திய அரசியலமைப்பின் 142-வது சரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒரு திருமணத்தை ரத்து செய்துள்ளது.
  • முழுமையான நீதியை வழங்குவதற்கான எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க சரத்து 142 நீதிமன்றத்தை அனுமதிக்கிறது.
  • பணத்தைப் பெற்றுக்கொண்டு பரஸ்பர விவாகரத்து ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கியது மற்றும் குடும்ப வன்முறை வழக்கைப் பதிவு செய்தது தொடர்பான வழக்கு இதுவாகும்.
  • மத்தியஸ்தத்தின் மூலம் செய்யப்படும் ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தக் கூடியவை என்றும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், அவை முறை அற்றவை என்றும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
  • அனைத்து வழக்குகளையும் ரத்து செய்த நீதிமன்றம், மீதமுள்ள தீர்வுத் தொகையைச் செலுத்துமாறு உத்தரவிட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்