இந்திய நாட்டு அரசானது, சர்க்கரை விலை (கட்டுப்பாட்டு) குறித்த 1966 ஆம் ஆண்டு ஆணையினை மறுமதிப்பீடு செய்து, 2025 ஆம் ஆண்டு சர்க்கரை விலை (கட்டுப்பாட்டு) குறித்த ஆணையினை உருவாக்கியுள்ளது.
உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் (DFPD) தளமானது சர்க்கரை ஆலை நிறுவனங்களின் வள திட்டமிடல் (ERP)/ அமைப்புகள், செயலிகள் மற்றும் தயாரிப்புகள் (SAPAs) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்படும்.
கட்டுப்பாட்டு ஆணையில் கச்சா சர்க்கரையும் சேர்க்கப்பட்டு, இந்த நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மொத்தச் சர்க்கரை இருப்புகளுக்கும் இந்த விலை குறித்த ஒரு ஆணையானது பரிசீலிக்கப்படும்.
ஒரு நாளைக்கு சுமார் 500 டன்னுக்கும் (TCD) அதிகளவிலான உற்பத்தித் திறன் கொண்ட (கரும்பு நொறுக்கும் திறன்) கந்த்சாரி ஆலைகள் 2025 ஆம் ஆண்டு சர்க்கரை விலை குறித்த கட்டுப்பாட்டு ஆணையில் சேர்க்கப்பட்டுள்ளன.
கரும்பிலிருந்துச் சர்க்கரை உற்பத்தியைப் பாதிக்கும் பல்வேறு வகையான துணைப் பொருட்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சர்க்கரை விலை (கட்டுப்பாடு) தொடர்பான புதிய உட்பிரிவு ஆனது சர்க்கரை விலைக் கட்டுப்பாட்டு ஆணையில் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே தனித்தனி சர்க்கரை விலை (கட்டுப்பாடு) ஆணை இருக்காது.
தற்போதுள்ள 2018 ஆம் ஆண்டு சர்க்கரை விலை (கட்டுப்பாடு) ஆணையில் சர்க்கரை விலை (கட்டுப்பாடு) ஆணை தொடர்பான பல்வேறு விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.