சர்க்கரைப் பொருள்கள் கொண்ட பானங்கள் விளம்பரத்திற்கான உலகின் முதலாவது தடை – சிங்கப்பூர்
October 11 , 2019 2441 days 929 0
வேகமாக வளர்ந்து வரும் நாட்டில் மக்களுக்கு ஏற்படும் நோய்களைக் குறைக்கும் முயற்சியில் மிக அதிக சர்க்கரை பொருள்களைக் கொண்டு அடைக்கப்பட்ட பானங்களுக்கான விளம்பரங்களுக்கு மொத்தமாக தடை விதிக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.
மிக அதிக அளவுள்ள சர்க்கரைப் பொருள்களைக் கொண்ட பானங்களுக்கான விளம்பரங்களுக்குத் தடையை அமல்படுத்திய உலகின் முதலாவது நாடு சிங்கப்பூர் ஆகும்.