சர்வதேச அவசரகாலப் பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) அதிபருக்கு பரந்த இறக்குமதி வரிகளை விதிக்க அனுமதிக்காது என்று அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
IEEPA சட்டம் 1977 அக்டோபர் 28 அன்று அமெரிக்காவில் இயற்றப்பட்டது.
இது தேசிய அவசரநிலையை அறிவித்த பிறகு அதிபர் நிதி பரிவர்த்தனைகளை ஒழுங்கு படுத்த அனுமதிக்கிறது.
இந்தச் சட்டம் சொத்துக்களை முடக்கவும், வெளிப்புற அச்சுறுத்தல்களுக்குப் பதில் எளிக்கும் விதமாக பொருளாதாரப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப் படலாம்.
இந்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் எந்தவொரு அவசரநிலையும் தேசிய அவசர நிலைச் சட்டத்தின் (NEA) கீழ் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவின் பல பொருளாதாரத் தடைகளுக்கு IEEPA என்பது சட்ட அடிப்படையை உருவாக்குகிறது.