சர்வதேச இன அழிப்பு நிகழ்வின் நினைவு தினம் - ஜனவரி 27
January 29 , 2024 803 days 521 0
ஜெர்மனி நாடானது இத்தினத்தினை 1996 ஆம் ஆண்டு முதல் கடைபிடித்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த நாளை நியமித்தது.
1945 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியன்று, சோவியத் ஒன்றியத்தின் படைகள் ஆனது ஆஷ்விட்ஸ்-பிர்கெனோவ் எனப்படும் நாஜி வதை மற்றும் அழிப்பு முகாமில் சிக்கியிருந்த நபர்களை விடுவித்தன.
ஆஷ்விட்ஸில் சுமார் 1.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்ட நிலையில், அவர்களில் மிக பெரும்பான்மையானோர் (சுமார் 90%) யூதர்கள் ஆவர்.