சர்வதேச ஈயநஞ்சேறல் தடுப்பு வாரம் - அக்டோபர் 22 முதல் 29 வரை
October 28 , 2023 966 days 465 0
இந்த அனுசரிப்பானது, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடைபெறுகிறது.
ஈயநஞ்சேற்றத்தினால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் ஈயநஞ்சேற்றத்தினை குறிப்பாக குழந்தைகளில், ஈயநஞ்சேறல் பாதிப்பினை தடுப்பதற்கான நாடுகள் மற்றும் பங்குதார நாடுகளின் பல்வேறு முன்னெடுப்புகளை முன்னிலைப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் பிரச்சாரமானது, "குழந்தைப் பருவ ஈயநஞ்சேற்றத்தினை முடிவுக்குக் கொண்டு வருதலில்" கவனம் செலுத்துகிறது.