1893 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், சர் ருடால்ப் டீசல் (டீசல் என்ஜினை கண்டுபிடித்தவர்) முதன்முறையாக நிலக்கடலை எண்ணெயைக் கொண்டு என்ஜினை வெற்றிகரமாக இயக்கினார்.
வழக்கமான புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக புதைபடிவம் சாரா எரிபொருட்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
அடிப்படையில் பசுமை எரிபொருட்களாக விளங்கும் உயிரி எரிபொருள்கள் ஆனது, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருட்கள் ஆகும், மேலும் அவற்றின் பயன்பாடு கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்கிறது.