இந்த தினமானது நவம்பர் 03 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்திய அரசின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையானது 6வது சர்வதேச ஒற்றைச் சுகாதார தினத்தைக் கொண்டாடுவதற்காக வேண்டி ‘தொழில் துறை மற்றும் ஒற்றைச் சுகாதாரம்’ என்ற தலைப்பில் பங்குதாரர் மன்றம் ஒன்றை ஏற்பாடு செய்தது.
இது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
ஒற்றைச் சுகாதாரம் என்ற ஒரு கருத்தைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான அம்சங்களாக, பலதரப்பட்ட ஒத்துழைப்பையும், பல்துறை மற்றும் பலதுறைகளுக்கு இடையிலான ஈடுபாடுகளையும் முன்னிலைப்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.