இது சிவிங்கிப் புலிகளைப் பாதுகாப்பதற்காக என்று அர்ப்பணிக்கப்பட்ட முன்னணி அமைப்பான சிவிங்கிப் புலி வளங்காப்பு நிதியத்தினால் (CCF) நிறுவப்பட்டது.
டிசம்பர் 04 ஆம் தேதியானது, CCF நிறுவனர் டாக்டர் லாரி மார்க்கரால் வளர்க்கப்பட்ட கயாம் என்ற ஒரு சிவிங்கிப் புலி குட்டியினை நினைவு கூரும் விதமாக தேர்ந்தெடுக்கப் பட்டது.
சிவிங்கிப் புலிகளை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசரத் தேவை குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிவிங்கிப் புலிகள் முதன்மையாக ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளில் காணப் படும் திறந்தப் புல்வெளிகளில் காணப்படுகின்றன.
2020 ஆம் ஆண்டில், 8,000க்கும் குறைவான சிவிங்கிப் புலிகளே காடுகளில் இருந்தன என்பதோடு கடந்த 40 ஆண்டுகளில் 50% வீழ்ச்சி பதிவாகியுள்ளது.