சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு தினம் 2025 - ஏப்ரல் 26
April 30 , 2025 339 days 311 0
1986 ஆம் ஆண்டில் செர்னோபில் பேரழிவின் தாக்கங்கள் மற்றும் அணுசக்தியின் பல்வேறு அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள நான்காம் உலையானது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியன்று வெடித்தது.
மூன்று நாடுகளில் சுமார் 8.4 மில்லியன் மக்கள் அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப் பட்டனர்.
கதிரியக்க மாசுபாடு காரணமாக சுமார் 2,600 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பிலான சில பகுதிகள் (நிரந்தரமாக) மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியற்றதாக உள்ளது.