கேமல்லியா சினென்சிஸ் என்ற ஒரு தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஆனது, தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகின் மிகவும் பிரபலமான பானமாகும்.
தேநீர் ஆனது கி.மு. 2737 ஆம் ஆண்டில் சீனாவில் தோன்றியதாக நம்பப் படுகிறது.
இந்தியாவில் 1824 ஆம் ஆண்டில் தேயிலைச் சாகுபடியை ஆங்கிலேயர்கள் வணிக ரீதியாக அறிமுகப்படுத்தினர்.
அப்போதிலிருந்து, டார்ஜிலிங், நீலகிரி மற்றும் அசாம் போன்ற பகுதிகள் தேயிலைக்கு பெயர் பெற்றுள்ளதுடன், இந்தியா ஒரு பெரிய தேநீர் உற்பத்தியாளராக உருவெடுத்து உள்ளது.
இன்று, இந்தியா ஆண்டுதோறும் சுமார் 900,000 டன் தேயிலையை உற்பத்தி செய்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Tea for Better Lives' என்பதாகும்.