TNPSC Thervupettagam

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புதிய தலைமை

July 2 , 2021 1496 days 643 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆளுகை அமைப்பிற்கு இதுவரை தலைமை வகித்த இந்திய நாட்டின் பதவிக் காலம் சமீபத்தில் முடிவடைந்தது.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பினுடைய ஆளுகை அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய செயலாளர் (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு) அபூர்வா சந்திராவினுடைய பதவிக் காலம் (அக்டோபர் 2020 – ஜுன் 2021) நிறைவடைந்தது.
  • 35 ஆண்டு காலம் என்ற நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச தொழிலாளர் அமைப்பினுடைய ஆளுகை அமைப்பின் தலைமைப் பொறுப்பினை இந்தியா ஏற்றுக்  கொண்டிருந்தது.

குறிப்பு

  • ஸ்வீடன் நாட்டுத் தூதரான அன்னா ஜார்ட்ஃபெல்ட் மெல்வின் (Anna Jardfelt Melvin) என்பவர் இந்த அமைப்பின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • ரெனேட் ஹார்னுங்-டிராஸ் (Renate Hornung-Draus of Germany) என்பவர் பணி அளிப்பவர்களுக்கான பிரிவின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • கேட்டலின் பாஷியர் (Catelene Passchier) என்பவர் தொழிலாளர் பிரிவுக்கான துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக அதன் ஆளுகை அமைப்பில் மூன்று பெண் தலைவர்களைக் கொண்டு அது இயங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்