TNPSC Thervupettagam

சர்வதேச புக்கர் பரிசு 2025 வெற்றியாளர்

May 26 , 2025 14 days 238 0
  • கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக்கின் “Heart Lamp” 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளது.
  • இதனை தீபா பாஸ்தி மொழி பெயர்த்துள்ளார்.
  • கன்னட மொழியில் இப்பரிசினை வென்ற முதல் புத்தகம் இதுவாகும்.
  • வரலாற்றில் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு, இத்தாலிய, டேனிய மற்றும் ஜப்பானிய மொழிப் புத்தகங்களில் ஒன்றாக இது இடம் பெற்றுள்ளது.
  • இந்திய எழுத்தாளருக்கான இந்த விருது, கீதாஞ்சலி ஸ்ரீ டெய்சி ராக்வெல் என்பவரால் இந்தி மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட டோம்ப் ஆஃப் சாண்ட் என்ற ஒரு புத்தகத்திற்காக என்று இந்த விருதினை வென்ற மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்.
  • ஒரு கன்னட எழுத்தாளருக்குப் புக்கர் நிறுவனங்களால் விருது வழங்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
  • முதல் முறையாக 2013 ஆம் ஆண்டில் U.R.அனந்தமூர்த்தியின் படைப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
  • இதற்கிடையில், பாஸ்தி இந்தப் பரிசை வென்ற முதல் இந்திய மொழிபெயர்ப்பாளர் ஆனார்.
  • 2024 ஆம் ஆண்டில் அதே படைப்புக்காக வேண்டி ஆங்கில PEN அமைப்பின் 'PEN மொழி பெயர்ப்புகள்' விருதை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்