பிரான்சு நாட்டின் முன்னாள் தூதரக அதிகாரியான சுபம் ஷோகீனின் உலகளாவிய சொத்துக்களைக் கண்காணிப்பதற்காக இந்தியா விடுத்த ஒரு கோரிக்கையின் பேரில் சர்வதேச காவல் துறையானது தனது முதல் வெள்ளி அறிவிப்பினை/அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, அவரது இருப்பிடத்தைக் கண்டறிய மத்தியப் புலனாய்வுத் துறை ஒரு நீல அறிக்கையினையும் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் சர்வதேசக் காவல் துறை அமைப்பினால் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த வெள்ளி அறிக்கையானது, வண்ணக் குறியீடு கொண்ட ஒரு அறிக்கையாகும்.
இது உலகம் முழுவதும் உள்ள சட்டவிரோதமானச் சொத்துக்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த முன்னெடுப்பில் பங்கேற்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு வகையில், முதல் வெள்ளி அறிக்கையானது இத்தாலியின் வேண்டுகோளின் பேரில் வெளியிடப்பட்டது.
மற்றொரு வழக்கில், இந்திய அமலாக்கத் துறையின் வேண்டுகோளின் பேரில் அமித் மதன்லால் லகன்பாலுக்கு எதிராக வெள்ளி அறிக்கை வெளியிடப் பட்டது.