ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் நதியில் 1,856 மெகாவாட் திறன் கொண்ட சவல்கோட் நீர்மின் நிலையத் திட்டத்தினை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
209.80 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டமானது ஒன்றியப் பிரதேசத்தில் அமைக்கப் பட உள்ள மிகப்பெரிய நீர்மின் நிலையமாகும்.
சவல்கோட் திட்டம் முதன் முதலில் 1960 ஆம் ஆண்டுகளில் முன்மொழியப்பட்டது.
ஏப்ரல் 22 ஆம் தேதியன்று, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகள் மீது முழுக் கட்டுப்பாட்டையும் பெற்று, 1960 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தினை இந்தியா இடைநிறுத்தியது.
ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக முன்னர் நிறுத்தப்பட்ட துல்புல் வழிசெலுத்தல் திட்டத்தினை (உல்லார் தடுப்பணை) மீண்டும் தொடங்கவும் அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.