சவுதி தரைப்படைத் தளபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பயணம்
February 18 , 2022 1255 days 486 0
சவுதி தரைப்படைத் தளபதியான, லெஃடினன்ட் ஜெனரல் பஹத் பின் அப்துல்லா முகமது அல்-முத்தைர் (Fahd Bin Abdullah Mohammed Al-Mutair) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணமாக 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று இந்தியா வந்தார்.
இந்த 3 நாள் பயணமானது, சவுதி தரைப் படையில் பணியிலிருக்கும் ஒரு படைத் தளபதி இந்தியாவிற்கு வருகை புரிவது இதுவே முதல்முறையாகும்.
இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்குமிடையே வளர்ந்து வரும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளுக்கு இது சான்றாகும்.