சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு நாட்டிற்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் இரு நாடுகளுக்கும் எதிரான ஆக்கிரமிப்பாக கருதப் படும் என்று அறிவிக்கின்ற ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தமானது, பாகிஸ்தான் அரசானது சவுதி நாட்டின் படைகளுக்கு வரலாற்று ரீதியாகப் பயிற்சி அளிப்பதோடு சவுதி அரேபியாவானது பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் உட்பட அந்நாட்டிற்கான நிதி ஆதரவை வழங்குவதுடன் இரு நாடுகளின் நீண்ட கால இராணுவ உறவுகளை முறைப்படுத்துகிறது.
சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கையானது, குறிப்பாக 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காசா மோதலுக்குப் பிறகு இஸ்ரேலுடனான இயல்பாக்கம் தடை பட்டுள்ள நிலையில், அதன் கூட்டணிகளின் பன்முகத் தன்மையைக் குறிக்கிறது.
பாகிஸ்தான், இந்த வளைகுடா நாட்டிலிருந்து நிதி ஆதரவைப் பெறும் அதே வேளையில், பிராந்தியப் பாதுகாப்பு வழங்குநராக தனது பங்கை வலுப்படுத்த முயல்கிறது.