சாகித்ய அகாடமியானது பல்வேறு மொழிப் பிரிவுகளில் 2021 ஆம் ஆண்டிற்கான அதன் மதிப்பு மிக்க சாகித்ய அகாடமி விருது, யுவ புரஸ்கார் விருது மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருது ஆகியவற்றை அறிவித்தது.
2021 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதானது 20 இந்திய மொழிப் பிரிவுகளில் வழங்கப்பட்டது.
குஜராத்தி, மைதிலி, மணிப்பூரி மற்றும் உருது போன்ற மொழிப் பிரிவுகளின் வெற்றியாளர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆங்கில எழுத்தாளர் நமிதா கோகலே தனது Things to Leave Behind என்ற புதினத்திற்காக விருது பெற்றார்.
2021 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதானது 22 இந்திய மொழிப் பிரிவுகளில் வழங்கப்பட்டது.
இந்த விருதில் தமிழ்ப் பிரிவிற்கான விருது பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டு இராஜஸ்தானி மொழிப் பிரிவில் இந்த விருது வழங்கப்படவில்லை.
ஆங்கில எழுத்தாளர் மேகா மஜும்தார் 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘A Burning’ என்ற தனது முதல் புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் எனும் விருதை வென்றார்.
2021 ஆம் ஆண்டிற்கான பால் சாகித்ய புரஸ்கார் எனும் விருதானது 22 இந்திய மொழிப் பிரிவுகளில் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு குஜராத்தி மற்றும் பஞ்சாபி போன்ற மொழிப் பிரிவுகளில் பால சாகித்ய புரஸ்கார் விருது எதுவும் வழங்கப் படவில்லை.
ஆங்கில எழுத்தாளர் அனிதா வச்சாராஜினி "Amrita Sher-Gil: Rebel with a Paintbrush” என்ற தமது சுயசரிதைக்காக பால சாகித்ய புரஸ்கார் விருதைப் பெற்றார்.