நிகழ்நேர ஆளில்லா வான்வழி வாகன அச்சுறுத்தல்களை நடுநிலைப் படுத்தச் செய்வதற்காக இந்திய இராணுவமானது, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சாக்சம் ஆளில்லா வான்வழி வாகன அமைப்பின் (CUAS) கட்டமைப்பினை உட்சேர்த்துள்ளது.
காசியாபாத்தில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்துடன் இணைந்து சாக்சம் உருவாக்கப்பட்டது என்பதோடுஇது பாதுகாப்பான இராணுவத் தரவு வலையமைப்பில் (ADN) செயல்படுகிறது.
இந்த அமைப்பு ஆனது உத்திசார் போர்க்கள அமைப்பில் (TBS) முழுமையாக நிகழ்நேர கட்டமைப்பில் எதிரி நாட்டு ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகளைக் கண்டறிந்து, கண்காணித்து, அடையாளம் காட்டி, எதிர்க்கிறது.
இது நிகழ்நேர அச்சுறுத்தலைக் கண்டறிதல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்கணிப்புப் பகுப்பாய்வு மற்றும் படை வீரர்களுக்கு தானியங்கி முடிவு வழங்கீட்டு ஆதரவை வழங்குகிறது.
இது CUAS உணர்வுக் கருவிகள் மற்றும் ஆயுதங்களை ஒருங்கிணைக்கிறது, மேலும் முப்பரிமாண போர்க்களக் காட்சிப்படுத்தலை செயல்படுத்தி, ஆகாஷ்தீர் வான்வழிப் பாதுகாப்பு அமைப்புடன் உள்ளீடுகளை ஒத்திசைக்கிறது.