- சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation – SCO) சந்திப்பானது தஜகிஸ்தானின் தலைநகர் துசான்பேயில் நடைபெற்றது.
- இந்தச் சந்திப்பில் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவி வரும் பாதுகாப்பின்மைப் பற்றிய விவாதங்கள் பெருமளவில் இடம் பெற்றன.
- SCO மற்றும் SCO உறுப்பினர் நாடுகளின் பார்வையாளர் நிலையைப் பெற்ற நாடுகளின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
- இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் S. ஜெய்சங்கர் அவர்கள் SCO உறுப்பினர் நாடுகளின் சக அமைச்சர்களை சந்தித்த போது இந்தப் பிரச்சினை பற்றி தமது கருத்துகளை முன்வைத்தார்.
- SCO உறுப்பினர்கள் நாடுகளின் சந்திப்பில் ஆப்கானிஸ்தான், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார மீட்சி போன்ற மூன்று முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப் பட்டன.
இந்தியா விடுத்துள்ள அழைப்பு
- தீவிரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் டிஜிட்டல் வசதி வழங்குதல் போன்றவற்றை நிறுத்துவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
- மேலும் இந்தியாவானது கோவிட்-19 தொற்றுக்கு எதிரான ஆரம்ப நிலையிலேயே உலகளாவிய அளவில் தடுப்பூசி வழங்குவதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளது.
- சீர்திருத்தப்பட்ட பன்முகத் தன்மை (reformed multilateralism) குறித்தும் இந்திய அமைச்சர் உரையாற்றினார்.