மத்தியக் கலாச்சார அமைச்சகமானது, சாத் திருவிழாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெறுவதற்காக பன்னாட்டுப் பரிந்துரையைப் பெற முயற்சித்து வருகிறது.
2003 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் கீழ் மனிதகுலத்தின் மகத்தான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதிப் பட்டியலில் சேர்ப்பதற்காக இந்த முன்மொழிதல் முன் வைக்கப் பட்டுள்ளது.
சாத் திருவிழாவானது, சூரியக் கடவுள் மற்றும் தெய்வம் சாத்தி மையாவுக்கு அர்ப்பணிக்கப் படுகின்ற திருவிழாவாகும்.
இந்தியாவின் பழமையான பண்டிகைகளில் ஒன்றான இது பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மாபெரும் கொண்டாட்டங்களுடன் கொண்டாடப்படுகிறது.
மொரிசியஸ், பிஜி, சுரினாம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்தில் உள்ள புலம்பெயர்ந்த சமூகங்களாலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் தற்போது 15 கூறுகள் யுனெஸ்கோ அமைப்பின் மனிதகுலத்தின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியங்களின் பிரதிநிதி/மாதிரிப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.