புதிதாக தொடங்கப்பட்ட 51.38 கி.மீ பைராபி-சாய்ராங் இரயில் பாதையானது, மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலுக்கு 18 கி.மீ தொலைவில் இரயில் போக்குவரத்து இணைப்பை வழங்குகிறது.
2008-09 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இரயில் பாதையில், 48 சுரங்கப்பாதைகள் மற்றும் 142 பாலங்கள் உள்ளன.
கலாதன் பல் நோக்கு போக்குவரத்துத் திட்டத்தின் கீழ், இந்தியாவினால் நிதி அளிக்கப்படும் மியான்மரின் சிட்வே துறைமுகத்திற்கு சாய்ராங் ஒரு முக்கிய இணைப்பாகச் செயல்படக்கூடும்.
மியான்மரில் நிலவும் உள்நாட்டு அமைதியின்மை மற்றும் வங்காளதேசத்தில் நிலவும் அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவை அகர்தலா-அகௌரா மற்றும் இம்பால்-மோரே இரயில் சேவை இணைப்புகள் உள்ளிட்ட எல்லை தாண்டிய இணைப்பை தாமதப்படுத்தியுள்ளன.