மூத்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவி சோப்ரா, சார் தாம் திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உயர்மட்டக் குழுவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இந்து புனிதத் தலங்களை இணைக்கும் சுமார் 900 கி.மீ. நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி விரிவுபடுத்துவதற்கான ஒரு திட்டமாகும்.