2022 ஆம் ஆண்டு ‘சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படையின் 44 பேர் கொண்ட படைக் குழுவினர் சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளனர்.
இந்த நிகழ்வின் போது இந்திய விமானப் படை உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட தனது தேஜாஸ் MK-I விமானத்தினைக் காட்சிப்படுத்தும்.
சிங்கப்பூர் விமானக் கண்காட்சி என்பது உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறைகள் அதன் தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகின்ற, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாகும்.