TNPSC Thervupettagam

சிந்து நதி நீர் ஒப்பந்த திருத்த அறிக்கை

February 1 , 2023 823 days 515 0
  • ராட்டில் நீர்மின் நிலையம் மற்றும் கிஷன்கங்கா நீர்மின் நிலையம் ஆகியவை தொடர்பான பிரச்சனைகளை அறிக்கை அனுப்பியதற்கான காரணம் என்று இந்தியா குறிப்பிடுகிறது.
  • சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஆனது, இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய நதிகளின் நீர் இந்திய அரசின் கட்டுப்பாட்டிலும், சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய நதிகளின் நீர் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
  • இந்த நதிநீருக்கான அணுகல் வசதியில் இந்தியாவுக்கு 20 சதவீதமும், பாகிஸ்தானுக்கு 80 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசினைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் "இணக்கம் அற்றதாக" உள்ளது.
  • அதாவது உடன்படிக்கைக்கு உடன்பட மறுப்பது என்பது இதன் பொருளாகும்.
  • இதனால், ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா அறிக்கை அனுப்பியுள்ளது.
  • ராட்டில் மின் நிலையமானது செனாப் ஆற்றில் அமைந்துள்ளது.
  • அப்போதையப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் 2013 ஆம் ஆண்டில் இதற்கான அடிக்கல்லினை நாட்டினார்.
  • 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் எதிர்ப்புகளை எழுப்பியப் போதிலும், உலக வங்கி ஆனது இந்தத் திட்டத்தை முன்னோக்கி மேற்கொள்ளுமாறு இந்தியாவிற்கு அனுமதி வழங்கிய பிறகு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்