பிரித்து ஆளும் கொள்கையின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர் கொள்வதற்காக “சினாத்ரா கோட்பாட்டினை” மத்தியமற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் குழுவின் உறுப்பினர் நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
சினாத்ரா கோட்பாடு இரு தூண்களை (கோட்பாடுகளை) அடிப்படையாகக் கொண்டு உள்ளது. அவை,
கோவிட் – 19, காலநிலை மாற்றம் மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்காக சீனாவுடனான ஒத்துழைப்பினை தொடர்தல்.
பொருளாதாரத்தில் தொழில்நுட்ப துறைகளைப் பாதுகாப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் யுக்தி சார் இறையாண்மையை வலுப்படுத்துதல்.