இத்தினமானது, 1984 ஆம் ஆண்டில் உலகின் மிக உயரமான போர்க் களத்தில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மேக்தூத் என்ற நடவடிக்கையினை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் தான், இந்தியப் படை வீரர்கள் பிலாஃபோண்ட் லா என்ற கணவாயில் தரையிறங்கி, சியாச்சின் பனிப் பாறையின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றி, சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் ஓர் உத்திசார் முன்னேற்றத்தினை அடைந்தனர்.
சியாச்சின் பகுதியானது, 1949 ஆம் ஆண்டு முதலான கராச்சி ஒப்பந்தத்தில் இருந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சர்ச்சைக்குரிய ஒரு இடமாகத் திகழ்ந்து வருகிறது.