நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் தரவரிசை ஆண்டுதோறும் உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.
குற்ற விகிதம் மற்றும் விசாரணை போன்ற அளவுருக்களின் அடிப்படையில் இவை தீர்மானிக்கப் படுகின்றன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பட்டியலின் படி, டெல்லியின் வடக்கு மாவட்டத்தில் உள்ள சதர் பஜார் காவல் நிலையம் நாட்டிலேயே சிறந்ததாக உள்ளது.
அதைத் தொடர்ந்து ஒடிசாவின் கஞ்சத்தில் உள்ள கங்காபூர் காவல் நிலையம் உள்ளது.
ஹரியானாவின் ஃபதேஹாபாத்தில் பட்டுக் கலன் (Bhattu Kalan), வடக்கு கோவாவில் வால்போய் மற்றும் கர்நாடகாவின் ராய்ச்சூரில் உள்ள மான்வி காவல் நிலையம் ஆகியன முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.
லட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள காட்மத் தீவு காவல் நிலையம் ஆறாவது இடத்திலும், மகாராஷ்டிராவின் சாங்கிலியில் உள்ள ஷிராலா காவல் நிலையம் ஏழாவது இடத்திலும், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள தொட்டியம் காவல் நிலையம் எட்டாவது இடத்திலும் உள்ளது.