உச்சநீதிமன்றமானது நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக அதன் முன்னாள் நீதிபதியான அமிதவ ராய் தலைமையிலான 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இக்குழுவானது சிறைச்சாலைகளில் உள்ள அதிகப்படியான கைதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளையும் ஆய்வு செய்யும் என நீதிபதிB. லோகுர் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.