உச்ச நீதிமன்றக் குழுவானது பல்வேறு சிறைத் துறை சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றமானது சிறை நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் நீதிபதியான அமிதவ் ராய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை 2018 ஆம் ஆண்டில் அமைத்திருந்தது.
‘சிறைச் சாலைகள்/அதில் வைக்கப்பட்டுள்ள நபர்கள்’ என்பது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பட்டியல் IIன் கீழ் உள்ள ஒரு மாநிலக் கூறாகும்.
பரிந்துரைகள்
ஒவ்வொரு புதிய கைதியும், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் உரையாட ஒரு நாளைக்கு ஒரு முறை அழைத்துப் பேசுவதற்காக இலவச தொலைபேசி வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.
நவீன சமையல் வசதிகள், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக சிற்றுண்டிச் சாலையை ஏற்படுத்த வேண்டும்.
வழக்கு விசாரணைகளுக்காகக் காணொளியைப் பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு 30 கைதிகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு வழக்கறிஞர் இருக்க வேண்டும்.
சிறிய வகைக் குற்றங்களைப் பிரத்தியேகமாக கையாளுவதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.