சிற்றாமைகளுக்கு செயற்கைக்கோள் கண்காணிப்புக் கருவி பொருத்தல்
January 12 , 2026 192 days 245 0
சென்னையில் ஒரு முன்னோடி முயற்சியாக, சென்னை கடற்கரைகளில் சிற்றாமைகளுக்கு செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கும் கருவிகள் பொருத்தும் பணி தொடங்கியது.
முட்டையிடுவதற்காக கரைக்கு வந்த இரண்டு சிற்றாமைகளுக்கு (ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள்) செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டன.
2025–2027 வரையிலான இந்த இரண்டு ஆண்டு காலத் திட்டம், ஆமைகளின் இயக்கம் மற்றும் கூடு கட்டுதலைப் பற்றி ஆய்வு செய்ய செயற்கைக்கோள் தொலை அளவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இந்தத் திட்டம் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) மற்றும் வண்டலூரில் உள்ள மேம்பட்ட வனவிலங்குப் பாதுகாப்பு நிறுவனம் (AIWC) ஆகியவற்றால் செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஆய்வு தமிழ்நாட்டில் உள்ள சென்னை கடற்கரை மற்றும் காவிரி டெல்டா பகுதிகளை உள்ளடக்கும்.
மொத்தம் 10 ஆமைகளுக்கு செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கக்கூடிய கருவிகள் பொருத்தப்படும் என்பதோடு மேலும் 1,000 ஆமைகளுக்கு துடுப்புகளில் அடையாளக் குறியிடப்படும்.